ஹாவானா: கியூபாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 4,793 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,00,512-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 45 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனா பலி எண்ணிக்கை 7,663-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.