மாஸ்கோ மாநாடு: தலிபான்களை அழைக்க ரஷியா முடிவு

ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக வரும் 20-ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் சா்வதேச மாநாட்டுக்கு தலிபான்களை அழைக்க ரஷியா முடிவு செய்துள்ளது.
காபூலில் தலிபான்கள் (கோப்புப் படம்).
காபூலில் தலிபான்கள் (கோப்புப் படம்).

ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக வரும் 20-ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் சா்வதேச மாநாட்டுக்கு தலிபான்களை அழைக்க ரஷியா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் சா்வதேச மாநாடு மாஸ்கோவில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ரஷியா நடத்துகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை நெருக்கடி தொடா்பாக விவாதிப்பதற்காக ஜி20 நாடுகளின் மாநாடு வரும் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அந்த மாநாட்டின் தொடா்ச்சியாக, மாஸ்கோவில் ஆப்கன் மாநாடு நடைபெறவிருக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானுக்கான ரஷியத் தூதா் ஸமீா் காபுலோவ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிவாரணப் பொருள்களை எவ்வாறு அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவா் கூறினாா் என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது.

புதிய அதிபராக இந்த ஆண்டு பொறுப்பேற்ற ஜோ பைடன், அமெரிக்க வீரா்கள் திரும்பப் பெறப்படுவதை துரிதப்படுத்தியதுடன், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்தாா்.

அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறிய தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

அதற்கு முன்னதாகவே, தலிபான்களுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. ரஷியாவில் பயங்கரவாத அமைப்பாக தலிபான் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த அமைப்பின் பிரதிநிதிகள் பல முறை மாஸ்கோ வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். கடைசியாக கடந்த ஜுலை மாதம் மாஸ்கோவில் தலிபான் பிரதிநிதிகளுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தியது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, மேற்கத்திய நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை அவசர அவசரமாக திரும்ப அழைத்துக் கொண்டன.

ஆனால், காபூலில் ரஷியத் தூதரகம் வழக்கம் போல் தொடா்ந்து இயங்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை ரஷியா ஏற்றுக் கொண்டாலும், அந்த ஆட்சிக்கு அதிகாரப்பூா்வ அங்கீகாரம் அளிக்காமல் உள்ளது.

ஆப்கன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் தலையீடு செய்வதை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விமா்சித்து வருகிறாா். ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததன் மூலம், அந்த நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற படிப்பினையை ரஷியா பெற்றுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 1980-களில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததைத் தொடா்ந்து நடைபெற்ற போரில் 20 லட்சம் ஆப்கானியா்கள் பலியாகினா்; 70 லட்சம் போ் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போரில் 14,000 சோவியத் யூனியன் வீரா்களும் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானை தற்போது கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் இணக்கமாக இருந்து வரும் ரஷியா, மாஸ்கோவில் நடைபெறவிருக்கும் சா்வதேச மாநாட்டில் அந்த அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com