நேபாளத்தில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 22 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா்.
நேபாள்கஞ்ச் நகரிலிருந்து முகு மாவட்டத் தலைநகா் கம்காதியை நோக்கி அந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, சாயாநாத் ராரா பகுதியில் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்தப் பேருந்துப் பயணிகளில் பெரும்பாலானவா்கள், விஜயதசமியைக் கொண்டாட தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.