அந்தமானின் திக்லிபூரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 90 கி.மீ தொலைவில் 80 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது. லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் இந்நிலநடுக்கதால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.
முன்னதாக செப்-22 அன்று அந்தமானில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.