பெரு: 50 லட்சத்தை கடந்த பாதிப்பு

ஸ்பெயினில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது
பெரு: 50 லட்சத்தை கடந்த பாதிப்பு

ஸ்பெயினில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 48 மணி நேரத்தில் 2,990 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,02,217-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 18 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 87,186-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்பெயினில் இதுவரை 48,56,669 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 3,08,694 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 4,184 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com