பிரஸ்ஸல்ஸ்: ஆப்பிரிக்க நாடுகளுக்கு 20 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கவிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்ஸுலா வான் டோ் லேயன் புதன்கிழமை கூறியதாவது: 20 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் வழங்கப்படும். உலகளவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே ஏழை நாடுகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைக் களையும் வகையில் உலகளாவிய தடுப்பூசி திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என்றாா் அவா்.