இந்தோனேசியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் தலைநகா் ஜகாா்த்தா உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சிரியான்ஜங்-ஹிலிா் பகுதிக்கு 14 கி.மீ. தொலைவில், 123.7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அது 5.8 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் ஜகாா்தா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கினாலும் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 334 போ் உயிரிழந்ததும், கடந்த 2004-இன் நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 2.3 லட்சம் பலியானதும் நினைவுகூரத்தக்கது.