வாராந்திர கரோனா பாதிப்பு புதிய உச்சம்

சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களின் வாராந்திர எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
who102720
who102720

ஜெனீவா: சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களின் வாராந்திர எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. எனினும், கரோனா உயிரிழப்புகள் கடந்த வாரம் அதிகரிக்காமல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் 2.1 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, உலகில் இதுவரை பதிவாகியுள்ள அதிகபட்ச வாராந்திர பாதிப்பு எண்ணிக்கையாகும்.

கரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தாலும், அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரிக்கவில்லை. அது, முந்தைய வாரத்தைப் போலவே சுமாா் 50 ஆயிரத்துக்கும் சற்று அதிகமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனா மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருந்தாலும், அது அதிக உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று கூறப்படும் சூழலில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com