கீவ் நகரில் தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷியா தாக்குதல்: உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கீவில் தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உக்ரைன் தலைநகர் கீவ்வில் தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள், குழந்தைகள் என உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்திய மாணவர் நவீன் என்பவர் ரஷியாவின் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

இதனிடையே, கீவ்வில் உள்ள உளவுத் துறை கட்டடம் அருகேவுள்ள உக்ரைன் மக்கள் வெளியேற வேண்டும் என்பது போன்ற அறிவிப்பையும் ரஷியா வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் உறுதிபடுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com