உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 20 லட்சத்தை எட்டியுள்ளதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 20 லட்சம் அகதிகள் சர்வதேச எல்லைகளைக் கடந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம் என்று ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி டிவிட்டரில் தெரிவித்தார்.
பாதுகாப்பான வழித்தடங்களில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு நகரமான சுமியிலிருந்து வெளியேறும் பாதை, ரஷிய தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து வழிகளில் ஒன்றாகும்.