உக்ரைனில் அமைதி வேண்டி கண்ணீருடன் பாடும் சிறுமி: இதயம் உள்ள ரஷியா கேட்குமா?

உக்ரைனை சேர்ந்த 9 வயது சிறுமி அமிலியா, தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியப் படைகளின் தீவிர தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு விரைவில் அமைதி திரும்ப வேண்டும்
உக்ரைனில் அமைதி வேண்டி கண்ணீருடன் பாடும் சிறுமி: இதயம் உள்ள ரஷியா கேட்குமா?

உக்ரைனை சேர்ந்த 9 வயது சிறுமி அமிலியா, தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியப் படைகளின் தீவிர தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று கண்ணீருடன் "என் வாழ்க்கையை நான் வரைகிறேன்" என்ற பாடல், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

உக்ரைனிய சிறுமியின் கண்ணீருடன் கூடிய பாடலை கேட்டாவது இறக்கம் கொள்வாரா இதயம் உள்ள ரஷிய அதிபர் பதின். 

உலகம் முழுவதும் சிறுமி அமிலியாவின் பாடல்கள் அவரவர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

சிறுமியின் அமிலியா பாடும் பாடலின் பொருள் உங்களுக்காக இதோ, 

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்…
என்னுடைய கதை இது…
சாதாரண, எதிர்க்கும் திராணி அற்ற என் தாயும், தந்தையும் என்னை ஒருநாள் இங்கு அழைத்து வந்தார்கள்...

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்…
மையுயூயூ மொய்ஜஷா
வன்முறை மூண்ட பூமிக்கு எதிர்காலம் இல்லை

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்…
மையுயூயூ மொய்ஜஷா
கனவு பறிக்கப்பட்டதும் உங்களை அச்சம் கொல்லும்

குழந்தைகள் விளையாடவில்லை.
ஆனால் தாய்கள், தந்தைகளுடன் தப்பி ஓடினார்கள்
இது அக்கிரமம்

அதன்பின் சூரியன் ஒருபோதும் வானில் உதிக்கவில்லை
தெருக்கள் ஆள் அரவமற்று வெறிச்சோடி கிடந்தன
ஒவ்வொரு நகரமும்...
ஒவ்வொரு நாளும் இப்படியே கடந்தது

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்…
மையுயூயூ மொய்ஜஷா
வன்முறை மூண்ட பூமிக்கு எதிர்காலம் இல்லை

அமைதிக்காக பிரார்த்தனை செய்தவர்களும் இருந்தார்கள்…
ஆனால் அவரும் எம்மை போலவே அழுதார்,
தனது வீட்டை விட்டு வெளியேறி, 
எம்மை போலவே அவர் அழுதார்
ஒருபோதும் திரும்பி வரமுடியாததாக அவர் வாழ்க்கை மாறிப்போனது

அமைதி என்பதில்லை
அன்பு என்பதில்லை
பீரங்கியிலிருந்து பாயும் ஒவ்வொரு குண்டும் மௌனத்தை உடைக்கிறது,
இரவை நடுங்கச் செய்தபோது
உலகம் அதன் கண்களை இறுக்க மூடிக்கொள்கிறது
வாழ்க்கை அனைத்தும் ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டுவிட்டது
பணம் சட்டைப்பையில் அடைக்கப்பட்டுவிட்டது
ஆனால் நிரம்பவில்லை
எங்களிடம் துளியும் நம்பிக்கை இல்லை
அதனால் ...

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்…
என் வாழ்க்கையை நான் மூழ்கடிக்கிறேன்
மையுயூயூ மொய்ஜஷா
வன்முறை மூண்ட பூமிக்கு எதிர்காலம் இல்லை

என் வாழ்க்கையை நான் வரைகிறேன்…
மையுயூயூ மொய்ஜஷா
ஒவ்வொரு கனவு பறிக்கப்பட்டதும் 
உங்களை அச்சம் பீடிக்கும்

என் வாழ்க்கையை நான் வரைகிறேன், 
என் கதை, நீண்ட பயணத்துக்குப் பிறகு 
இரவுக்குள் எல்லாமே மாறிப்போனது
இப்போது நான் இங்கே இருக்கிறேன்
குழந்தைகள் ஓடி விளையாடவில்லை,
ஆனால் 
அவர்கள் போரினால் தப்பி ஓடுகிறார்கள்
இது என்று முடியும் என்பது யாருக்குத் தெரியும்?  

'என் வாழ்க்கையை நான் வரைகிறேன்’ என்ற இந்த பாடல் வரிகளின் ஒவ்வொரு சொல்லும் கேட்போர் மனதை நிலைகுலையச் செய்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com