சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஒரே நம்பிக்கையுடன் உக்ரைன் - போலந்து எல்லையை கடக்கும் மக்கள்

உக்ரைனில் போர் நின்று விடும் என்ற நம்பிக்கையோடு நாட்டிலேயே தங்கியிருந்தவர்களும், தங்களது நம்பிக்கையை இழந்து, தற்போது அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

News image

ஒரே நம்பிக்கையுடன் உக்ரைன் - போலந்து எல்லையை கடக்கும் மக்கள்

Updated On :29 மார்ச் 2022, 6:06 am


உக்ரைனில் போர் நின்று விடும் என்ற நம்பிக்கையோடு நாட்டிலேயே தங்கியிருந்தவர்களும்கூட, தங்களது நம்பிக்கையை இழந்து, தற்போது அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியில் தங்களது குறைந்தபட்ச உடைமைகளுடன் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் அவர்கள் எல்லையைக் கடக்கும் போது ஒரே ஒரு நம்பிக்கை மட்டும்தான் அவர்களை வழிநடத்துகிறது. அதுதான், நிச்சயம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்புவோம் என்பதே.

போர் தொடங்கிய போது ஆயிரக்கணக்கானோர் தங்களது நாடுகளை விட்டு வெளியேறிய நிலையில், பலரும் நிலைமை விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையோடு அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் நிலைமை சீரடையாமல் உணவுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால், போலந்து நோக்கி தங்களது பணத்தைத் தொடங்குகிறார்கள்.

நடைப்பயணமாகவோ அல்லது கார்கள் மூலமாகவோ பலரும் போலந்தை அடைகிறார்கள். போலந்து எல்லைப் பகுதியை நோக்கி வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களாகத்தான் இருக்கிறார்கள். உக்ரைனிலிருந்து ஆண்கள் வெளியேற தடை விதித்திருப்பதால், பெண்களும் குழந்தைகளும் மட்டுமே எல்லையை தாண்டுகிறார்கள்.

போலந்தின் மெடிகா மற்றும் ஷேய்னி போன்ற கிராமங்களில் தஞ்சமடைகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.