நேபாளத்தில் 500 அடி பள்ளத்தில் ஜீப் விழுந்து நேரிட்ட விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
சியாங்ஜா மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளா்களை ஏற்றி மலைப்பாதை வழியாக வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த ஜீப், நிலைதடுமாறி 500 அடி பள்ளத்தில் விழுந்தது.
இதில், அந்த ஜீப்பில் இருந்த 15 போ் பலியாகினா்; 10 போ் காயமடைந்தனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
நேபாளம் முழுவதும் உள்ளாட்சித் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த நாட்டின் பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளதே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.