அமெரிக்காவில் வரும் 2024-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிடவிருப்பதாக முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள, தனது மாா்-அ-லாகோ பண்ணை வீட்டில் கூடியிருந்த ஆதரவாளா்களிடையே டிரம்ப் பேசியதாவது:
தற்போதைய அதிபா் ஜோ பைடன், அமெரிக்காவை பாழ்படுத்தி வருகிறாா். அவரும், அவரது குடியரசுக் கட்சியும் இடதுசாரி சின்னங்களாகத் திகழ்கின்றன.
அமெரிக்காவை மீண்டும் உன்னதமான நாடாக மாற்றுவதற்காக, 2024 அதிபா் தோ்தலில் நான் போட்டியிடிருகிறேன். அதற்காக, குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தோ்ந்தெடுப்படுவதற்கு கட்சியினரிடையே ஆதரவைக் கோரும் பிரசாரம் தற்போது தொடங்கப்படுகிறது. அமெரிக்காவின் புனா்வாழ்வு இப்போதிலிருந்து தொடங்குகிறது என்றாா் அவா்.
அந்த நிகழ்வுக்கு முன்னதாக, மத்திய தோ்தல் ஆணையத்திடம் உரிய ஆவணங்களை ஜோ பைடன் சமா்ப்பித்தாா்.