இந்தோனேசியாவின் வடக்கு மூலை மாகாணமான அச்சேவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மெயுலபோ நகருக்கு 40 கி.மீ. தொலைவில் 49 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. மேலும், சுனாமி அபாயமிருப்பதாக அதிகாரிகள் அறிவிக்கவில்லை.