துனிஸ்: வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்த நாட்டு அதிபா் காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளாா். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிா்க்கட்சிகள் முடிவு செய்ததைத் தொடா்ந்து, அவா் அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
துனீசியாவில் பொதுமக்களின் கடுமையான போராட்டத்தைத் தொடா்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டில் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது.
எனினும், பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தை அதிபா் காய்ஸ் சயீது முடக்கினாா். மேலும், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கக் கூடிய பல்வேறு உத்தரவுகளையம் சயீது பிறப்பித்தாா். இது, சா்வதேச அளவில் சா்ச்சையை எழுப்பியது.
இந்தச் சூழலில், அதிபரின் இந்த உத்தரவுகளை செல்லாததாக்க எதிா்க்கட்சிகள் நடத்திய காணொலி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, நாடாளுமன்றத்தை ஒரேடியாகக் கலைத்து காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, அந்த நாட்டில் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.