இலங்கையில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட் விலை, ரூ. 500 உயர்த்தப்பட்டுத் தற்போது ரூ. 2,350 ஆக விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு மார்ச் 31 இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சிமெண்ட் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
எரிபொருள் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்த விலை உயர்வு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, கடந்த மார்ச் 13 ஆம் தேதி ரூ. 1,350 ஆக இருந்த சிமெண்ட் மூட்டையின் விலையை ரூ. 500 உயர்த்தி, ரூ. 1,850 என விற்கத் தொடங்கினர்.
கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையில் மிகக் குறைந்த கால இடைவெளியிலேயே மீண்டும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.