இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு கல்வித்துறை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இலங்கையில், ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் அடுத்த கல்வியாண்டிலிருந்து, பள்ளி செயல்படும் நேரம் மேலும் 1 மணி நேரம் அதிகரிக்கப்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்.. பிரிட்டனில் 11 வயதில் உறங்கி, 21 வயதில் விழித்தவர்: நம்பமுடியவில்லையா?
இந்த ஆண்டு பல்வேறு சிக்கல்களால் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய முடியாத நிலையில், இந்த கல்வியாண்டில் முடிக்க முடியாமல் போகும் நிலையில், அந்தப் பாடங்களை அடுத்த ஆண்டு கூடுதல் நேரம் பள்ளிகளை செயல்பட வைத்து நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.