அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 எனப் பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 எனப் பதிவாகி உள்ளது. 
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 எனப் பதிவு


அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 எனப் பதிவாகி உள்ளது. 

இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வடக்கு கேம்பெல் வளைகுடா பகுதியில் இருந்து 70  கிலோ மீட்டர் தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.6 அலகுகளாகப் பதிவானது

இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com