காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாண தலைநகா் மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில், 9 போ் பலியானதாகவும், 13 போ் காயமடைந்ததாகவும் காவல் துறைத் தலைவா் முகமது ஆசிஃப் தெரிவித்துள்ளாா்.
மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் 2 வாகனங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அவா், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவோா் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் வாழும் ஷியா சிறுபான்மையின ஹஸாரா இனக்குழுவை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூா் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் மசூதி அருகிலும் மத வழிபாட்டு பள்ளியிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 33 ஷியா முஸ்லிம்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.