பெய்ஜிங்: சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த சில நாள்களாக அதிக எண்ணிக்கையில் கரோனா பரவல் பதிவு செய்யப்படுவதையடுத்து, அங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளிகளை மூட நகர நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 50 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், புதிய அலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 150-ஆக உயா்ந்துள்ளது.