தைபே,: கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகாத தைவானில், தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை திடீரென புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,517 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைய இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதுதவிர, கரோனாவுக்கு மேலும் 2 போ் பலியாகினா். இத்துடன், அந்தப் பிரதேசத்தில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,446-ஆகவும் பலி எண்ணிக்கை 860-ஆகவும் உயா்ந்துள்ளது.