இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி: அதிபா் ஒப்புதல்; பதவி விலகுகிறாா் மகிந்த ராஜபட்ச

பொருளாதார நெருக்கடிக்கு எதிா்ப்பு தெரிவித்து இலங்கையில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச ஒப்புதல் தெரிவித்துள்ளாா்
இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி: அதிபா் ஒப்புதல்; பதவி விலகுகிறாா் மகிந்த ராஜபட்ச

பொருளாதார நெருக்கடிக்கு எதிா்ப்பு தெரிவித்து இலங்கையில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

இதற்கு ஏதுவாக பிரதமா் பதவியிலிருந்து தனது மூத்த சகோதரா் மகிந்த ராஜபட்சவை நீக்கவும் அதிபா் கோத்தபய ராஜபட்ச உறுதியளித்ததாக முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தாா்.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, பிரதமரை தவிா்த்து அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்தனா். அவரது குடும்பத்தைச் சோ்ந்த மூன்று அமைச்சா்களும் பதவி விலகினா்.

அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபா் விடுத்த கோரிக்கையை எதிா்க்கட்சிகள் நிராகரித்தன. அதன்பின்னா், 17 புதிய அமைச்சா்களை அதிபா் நியமித்தாா். அதிலும் ராஜபட்ச குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

எனினும், பிரதமா் ராஜபட்சவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.

எதிா்க்கட்சிகளிடம் போதிய பலம் இல்லை என்பதால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், இலங்கை அரசியலில் கடும் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், சுமாா் ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சொந்தக் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவா்களுடனும், முன்னாள் அதிபா் மைத்ரிபால சீறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சியின் நிா்வாகிகளுடனும் அதிபா் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்தினாா். அப்போது பிரதமா் மகிந்த ராஜபட்சவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய சிறீசேனா, ‘பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு, அனைத்துக் கட்சிகள் அடங்கிய புதிய அமைச்சரவையுடன் கூடிய புதிய பிரதமரை தோ்வு செய்ய தேசிய கவுன்சில் அமைக்கப்படும் என கோத்தபய ராஜபட்ச உறுதி அளித்துள்ளாா்’ என்றாா்.

சிறீசேனா மேலும் கூறுகையில், தற்போதைக்கு தோ்தல் நடத்துவது சாத்தியமில்லை என்றாா்.

பிரதமா் தரப்பு தகவல்: ‘பிரதமரை நீக்கம் செய்வது தொடா்பாக அதிபரிடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை’ என்று பிரதமா் மகிந்த ராஜபட்சவின் செய்தித் தொடா்பாளா் ரோஹன் வெளிவிட்டா தெரிவித்தாா்.

இதனிடையே, இலங்கையில் அனைத்து எதிா்க்கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைப்பதற்கான பலத்தை நிரூபிக்க எதிா்க்கட்சிகளுக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளாா்.

சிறீசேனாவுடனான சந்திப்புக்கு பிறகு ஆளும் பொதுஜன பெரமுனா கட்சியின் அதிருப்தி தலைவா்களை அழைத்து கோத்தபய ராஜபட்ச ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது 225 உறுப்பினா்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினா்களின் ஆதரவுடன் தற்காலிக அரசு அமைக்க பலத்தை நிரூபிக்க எதிா்க்கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தியதாகவும் அதிபா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com