அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் நகரின் சுகாதார நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது நகரின் 1.5 லட்சம் பேருக்கு குரங்கு அம்மை தொற்றுவதற்கான அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.