கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்; நீதி வழங்கப்பட்டது: ஜோ பைடன்

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குக் காரணமான அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்; நீதி வழங்கப்பட்டது: ஜோ பைடன்

Published On :


வாஷிங்டன்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குக் காரணமான அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

தனது வழிகாட்டுதலின்படி, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் அமிர் ஐய்மன் அல்-ஜவாஹிரி சனிக்கிழமை வான்வழி தாக்குதலின் மூலம் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டதாக திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜோ பைடன் அறிவித்தார்.

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு எத்தனை காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது அவசியமில்லை, நீங்கள் எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, எங்கள் நாட்டு மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அமெரிக்கப் படைகள் உங்களை கண்டுபிடித்து கொல்லும் என்றும் பைடன் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் என்று கண்டறியப்பட்ட ஐய்மான் அல்-ஜவாஹிரியை, அதிமுக்கிய பங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து, அமெரிக்கப் படைகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேடி வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.