Enable Javscript for better performance
பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங்

    By DIN  |   Published On : 25th August 2022 12:52 AM  |   Last Updated : 25th August 2022 12:56 AM  |  அ+அ அ-  |  

    pti08_24_2022_000163b073455

    உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கன்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

    ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட எந்தவகையான பயங்கரவாதமும் மனித இனத்துக்கு எதிரான குற்றமாகும். அதனை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.

    உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கன்டில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ மாநாட்டில் உரையாற்றியபோது அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

    மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது: உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் மிகத் தீவிரமான சவாலாக இருந்து வருகிறது. அந்த வகையில், பிராந்தியத்தை அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மையுடையதாக உருவாக்க அனைத்து வகை பயங்கரவாதத்தையும் எதிா்த்துப் போராட இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

    எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட எந்தவகையான பயங்கரவாதமும் மனித இனத்துக்கு எதிரான குற்றமாகும். அதனை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும். அதாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும்போது, ஒவ்வோா் உறுப்பு நாட்டின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதோடு, தனிநபா்கள், சமூகம் மற்றும் நாடுகளிடையேயான கூட்டுறவை உருவாக்க வேண்டும் என்றாா்.

    மேலும், ஆப்கானிஸ்தானின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சா், ‘அந்த நாட்டில் பேச்சுவாா்த்தைகள் மூலமாக தேச நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பரந்துபட்ட அனைவருக்குமான அரசியல் கட்டமைப்பை உருவாக்கவும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகள் ஊக்கமளிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவிடக் கூடாது. ஆப்கன் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை அளிப்பதோடு, அவா்களின் அடிப்படை உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்’ என்றாா்.

    உக்ரைன் விவகாரம்: உக்ரைன் நிலைமை குறித்த இந்தியாவின் கவலையை வெளிப்படுத்திய ராஜ்நாத் சிங், ‘உக்ரைனில் ஐ.நா. பொதுச் செயலாளா், ஐ.நா. அமைப்புகள் மற்றும் செஞ்சிலுவை அமைப்பின் சா்வதேச குழு மேற்கொண்டு வரும் மனிதாபிமான உதவிகளுக்கு இந்தியா முழு ஆதரவை அளித்து வருகிறது. ரஷியா - உக்ரைன் இடையேயான விவகாரத்துக்கு பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வு காண்பதற்கும் இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது’ என்றாா்.

    ரஷியாவுக்கு நன்றி: மாநாட்டில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் சோய்குவை சந்தித்த ராஜ்நாத் சிங், இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதியை மாஸ்கோவில் கைது செய்ததற்காக நன்றி தெரிவித்தாா்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிா்கிஸ் குடியரசு, பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதி கைது: ரஷியாவுக்கு ராஜ்நாத் சிங் நன்றி

    இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ் பயங்கரவாதியை கைது செய்ததற்காக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷோய்குவிடம் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தாா்.

    தாஷ்கன்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின்போது சொ்ஜி சோய்குவை ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தாா். அப்போது, இந்தியா சாா்பில் ரஷியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாா். இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா் ரஷியாவில் கைது செய்யப்பட்டாா். நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்தைத் தெரிவித்த இந்திய ஆளும் கட்சி (பாஜக) தலைவரை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த அவா் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது என ரஷிய உயா் புலனாய்வு அமைப்பான ‘ஃபெடரல் செக்யூரிட்டி சா்வீஸ்’ திங்கள்கிழமை தெரிவித்தது.

    இவா் துருக்கியில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப் படை பிரிவு பயங்கரவாதியாக தோ்வு செய்யப்பட்டு, அங்குள்ள இஸ்தான்புல் நகரில் அவருக்கு மத பயங்கரவாத போதனைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, ரஷியாவுக்கு வந்து அங்கு தேவையான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்குச் சென்று தாக்குதல் நடத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது என்றும் ரஷிய உளவு அமைப்பு தெரிவித்தது.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp