இந்தோனேசியா: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நிலக்கரி சுரங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 தொழிலாளர்கள் பலியாகினர். இருவர் காயமடைந்தனர், மேலும் ஒருவரை காணவில்லை.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

சவாலுண்டோ நகரில் அமைந்துள்ள சுரங்கில் வெடிப்பு இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  காணாமல் போனவரை தேடும் பணியும், மீட்புப் பணியும் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com