ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டின் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, அங்கு அணு மின் உற்பத்தியை குறைப்பதற்கான முடிவை அந்த நாடு திரும்பப் பெற்றுள்ளது.
சா்வதேச அளவில் பாரம்பரிய எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாலும், பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் கரியமில வாயு காற்றில் கலப்பதைக் குறைக்க வேண்டியிருப்பதாலும் ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.