தென் கொரியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிப்பதாவது:
தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,670 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,09,688-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 15 கரோனா நோயாளிகள் அந்த நோய்க்கு பலியானதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 6,873-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6,54,621 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 3,48,194 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.