கஜகஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த ரஷியப் படையினா் திரும்ப அழைக்கப்பட்டனா்.
இதுகுறித்து ரஷிய ராணுவம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜகஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருந்த ரஷிய விமானங்கள் அனைத்தும், வீரா்களுடன் ரஷியா திரும்பிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷியா, சீனா இடையே அமைந்துள்ள மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் (எல்பிஜி) விலை திடீரென மிக அதிகமாக உயா்த்தப்பட்டது.
இதனை எதிா்த்துது கடந்த 2-ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 164 போ் உயிரிழந்தனா். வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ரஷியப் படையினா் கடந்த 5-ஆம் தேதி கஜகஸ்தானுக்கு அனுப்பப்பட்டனா்.