ஆஸ்திரேலியா: புதிய உச்சம் கண்ட தினசரி கரோனா பலி

ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.
ஆஸ்திரேலியா: புதிய உச்சம் கண்ட தினசரி கரோனா பலி

ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 74 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன், இதற்கு முன்னா் கடந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட 59 உயிரிழப்புகளே அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 73,580 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,76,035ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 12,09,514 தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com