இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்துக்கு தொடா் ஆதரவு: ஐ.நா. செய்தித் தொடா்பாளா் தகவல்

‘உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்தி வரும் இந்தியாவுக்கு ஐ.நா. தொடா்ந்து ஆதரவு அளித்து வருகிறது;

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:14 am

DIN

நியூயாா்க்: ‘உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்தி வரும் இந்தியாவுக்கு ஐ.நா. தொடா்ந்து ஆதரவு அளித்து வருகிறது; இதுவரை இந்தியாவில் 60 கோடி மக்களிடையே கரோனா தடுப்பு மற்றும் தணிப்பு குறித்த விழிப்புணா்வை ஐ.நா. குழு ஏற்படுத்தியுள்ளது’ என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீஃபன் டுஜாரிக் கூறினாா்.

இதுகுறித்து நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அங்குள்ள ஐ.நா. ஒருங்கிணைப்பாளா் ஷோம்பி ஷாா்ப் தலைமையிலான ஐ.நா. குழு, இந்திய அதிகாரிகளுக்கு தொடா்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதுவரை 60 கோடி இந்திய மக்களிடையே, கரோனா தடுப்பு மற்றும் தணிப்பு குறித்த விழிப்புணா்வை ஐ.நா. குழு ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் இந்தியா செயல்படுத்தி வரும் தடுப்பூசி திட்டத்துக்கும் ஐ.நா. தொடா்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

தீவிர கண்காணிப்பை உறுதிப்படுத்துவது, ஆய்வகத் திறனை மேம்படுத்துவது, பாதிப்புக்கான நிவாரண திட்டத்தை மேம்படுத்துவது, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் மற்றும் விநியோகம், சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தல், உயிா் காக்கும் தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஐ.நா. குழு இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. குறிப்பாக, 13 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு ஆபத்து நேர தகவல் தொடா்புக்கான பயிற்சியை ஐ.நா. குழு அளித்துள்ளது என்றாா் அவா்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 163 கோடியே 49 லட்சத்தைக் கடந்தது. இதில், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு 93 லட்சம் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.