வடகொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா கண்டனம்

ஒரே வாரத்தில் வடகொரியா 2 முறை ஏவுகணை சோதனை நடத்தியதால் அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒரே வாரத்தில் வடகொரியா 2 முறை ஏவுகணை சோதனை நடத்தியதால் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்திவரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால்,  உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

இந்நிலையில் வடகொரியா இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது.  இதனால், அமெரிக்க,தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 6 சக்திவாய்ந்த ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com