ஒரே வாரத்தில் வடகொரியா 2 முறை ஏவுகணை சோதனை நடத்தியதால் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்திவரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை: வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி
இந்நிலையில் வடகொரியா இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. இதனால், அமெரிக்க,தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 6 சக்திவாய்ந்த ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.