ஸ்வீடனில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 40,055 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,15,276-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தாா். இத்துடன், அங்கு கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 15,744-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸ்வீடனில் இதுவரை 12,78,921 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 7,20,611 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 106 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.