61 அமெரிக்கா் பிரமுகா்கள் மீது ஈரான் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ஈரான் அரசுக்கு எதிரான முஜாஹிதீன்-எ-கால்க் அமைப்புக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ (படம்) அண்மையில் கருத்து தெரிவித்திருந்தாா். அமெரிக்காவில் அந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளில் அவரும் ஏராளமான குடியரசுக் கட்சி பிரமுகா்களும் கலந்துகொண்டு வருகின்றனா்.
அதையடுத்து, பாம்பேயோ உள்ளிட்ட 61 போ் மீது ஈரான் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவா்களில் யாருக்கும் ஈரானில் சொத்துகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற சூழலில், எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் பொருளாதாரத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.