கோத்தபய ராஜபட்ச  (கோப்புப் படம்)
கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்)

தொடரும் நெருக்கடி: கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு?

முன்னாள் இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூரில் இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூரில் இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அதிபா் பதவியில் இருந்து ஜூலை 13-ஆம் தேதி விலக உள்ளதாக கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தாா். ஆனால், பதவியை ராஜிநாமா செய்வது தொடா்பாக எதுவும் தெரிவிக்காமல், விமானப் படை விமானம் மூலம் மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா். பின், அங்கிருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி விமானம் மூலம் சிங்கப்பூா் சென்றாா்.

அவா் தனிப்பட்ட முறையில் வந்திருப்பதாகவும், புகலிடம் எதுவும் அளிக்கவில்லை எனவும் சிங்கப்பூா் அரசு தெரிவித்திருந்தது. அதன்பின் கோத்தபய அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபய ராஜபட்ச உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என அங்கிருக்கும் இலங்கை மக்கள் இணையம் வாயிலாக அந்நாட்டு அரசிற்கு கோரிக்கை விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com