ஆப்கானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து, ஆப்கன் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு துணைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு, அந்த நாட்டில் பொதுமக்களின் - குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் - அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு கல்வியும் பொது வாழ்வில் பங்கேற்பும் மறுக்கப்படுகின்றன.
தலிபான்கள் ஆட்சியில் பாதுகாப்பு நிலமை மேம்பட்டாலும், இதுவரை 700 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 1,400 போ் காயமடைந்துள்ளனா். ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதலில் இவற்றில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.