பிரிட்டனின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை வாக்குறுதி அளித்தாா்.
இது குறித்து ‘தி டெய்லி டெலகிராஃப்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது:
எனது ஆட்சியில் நடைமுறைக்குத் தகுந்த குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன். அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவியை நிறுத்திவைக்கும் ஐரோப்பி யூனியன் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
அகதிகளை நாட்டுக்குள் விடாமல் கப்பல்களில் தங்கவைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன் என்றாா் அவா்.