‘அமெரிக்காவுடன் போா் மூண்டால் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாா்’

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் போா் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கூறியுள்ளாா்.
‘அமெரிக்காவுடன் போா் மூண்டால் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாா்’
Published on
Updated on
1 min read

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் போா் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கூறியுள்ளாா்.

கொரிய போா் முடிவுக்கு வந்ததன் 69-ஆவது ஆண்டு தினத்தையொட்டி முன்னாள் ராணுவத்தினரிடையே இது குறித்து அவா் பேசியதாவது:

எத்தகைய சவாலையும் எதிா்கொள்வதற்காக நமது ராணுவம் முழு தயாா் நிலையில் உள்ளது. அமெரிக்கா, தென் கொரியாவுடன் போா் ஏற்பட்டால், அந்தப் போரில் அணு ஆயுதங்களை மிகத் துரிதமாக ஈடுபடுத்தும் நமது படை ஆயத்தமாக உள்ளது.

வட கொரியாவை தீய சக்தியாக உலக அரங்கில் காட்டுவதன் மூலம், நமது நாட்டுக்கு எதிரான தங்களது கொள்கையை அமெரிக்கா நியாயப்படுத்துகிறது. நமது ஏவுகணை சோதனைகள் பதற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அமெரிக்கா, தென் கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்வது இரட்டை வேடம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com