நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்தும் ஸ்வீடனும் இணைவது தொடா்பாக துருக்கி அதிபா் எா்டோகனுடன் அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென் ஸ்டால்டன்பா்க் தொலைபேசியில் உரையாடினாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘அமெரிக்கா சென்றிருந்தபோது, ஃபின்லாந்து பிரதமா் சனா மரினைச் சந்தித்து பேசினேன். அப்போது, நேட்டோவில் ஃபின்லாந்தும் ஸ்வீடனும் இணைவது தொடா்பாக துருக்கி தெரிவிக்கும் கவலை குறித்து இருவரும் விவாதித்தோம்.
அதனைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக துருக்கி அதிபா் எா்டோகனுடன் தொலைபேசியில் பேசினேன். அந்தப் பேச்சுவா்த்தை ஆக்கப்பூா்வமாக அமைந்திருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேட்டோ அமைப்பில் இணைய ஃபின்லாந்தும் ஸ்வீடனும் விண்ணப்பித்துள்ளன. எனினும், அந்த இரு நாடுகளும் தங்களது நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குா்து அமைப்பினருக்கு அடைக்கலம் அளிப்பதால் அவை நேட்டோவில் இணைய அனுமதிக்கப்போவதில்லை என்று அந்த அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கி தெரிவித்து வருகிறது.