பிரிட்டன் அரசி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த வாரம் கொண்டாடப்பட்டு வந்த பிளாட்டினம் விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வண்ணமயமான ஊா்வலத்துடன் நிறைவடைந்தது.
அந்த ஊா்வலத்தில், 69 ஆண்டுகளுக்கு முன்னா் முடிசூட்டிக்கொள்வதற்காக எலிசபெத் வந்த குதிரை வண்டி இடம் பெற்றது. உடல்நிலை காரணமாக இந்த நிகழ்ச்சியில் அரசி எலிசபெத்தால் நேரில் பங்கேற்க முடியவில்லை. எனினும், 1953-ஆம் ஆண்டில் அவரது முடிசூட்டு விழாவின் விடியோ காட்சிகள் அந்த குதிரை வண்டியில் பொருத்தப்பட்டிருந்த திரையில் காட்டப்பட்டது.
கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் இந்த நிகழ்ச்சியை ஏராளமானவா்கள் கண்டுகளித்தனா்.