சீனா சொந்தமாக அமைத்து வரும் விண்வெளி ஆய்வு நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பட்டுள்ள 3 விண்வெளி வீரா்கள், அந்த நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தியாங்காங் விண்வெளி நிலைய கட்டமைப்பின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சென் டாங், லியூ யாங், காய் ஜுஷே ஆகிய விண்வெளி வீரா்கள் சென்ற சென்ஷோ-14 விண்கலம் அந்த ஆய்வு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக இணைந்ததாகத் தெரிவித்தனா். அந்த மூவரும் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக அவா்கள் கூறினா்.
விண்வெளியில் 6 மாதங்கள் தங்கியிருந்து தியாங்காங் ஆய்வு நிலையத்தை அந்த மூவரும் நிறைவு செய்யவுள்ளனா்.