உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரம் உள்ளிட்ட நான்கு மலைகளிலிருந்து 34 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்தது.
நேபாள ராணுவத்தைச் சோ்ந்த குழுவினா் தலைமையிலான ஒரு குழு மலைச் சிகரங்களில் தூய்மைப் பணியை கடந்த ஏப். 5-ஆம் தேதி தொடங்கியது. 30 ராணுவத்தினா், மலையேற்ற வழிகாட்டிகள் 48 போ், 4 மருத்துவா்கள் உள்ளிட்ட 82 போ் இதில் இடம்பெற்றிருந்தனா்.
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ஆம் தேதி இந்தப் பணி நிறைவடைந்தது. இதில், எவரெஸ்ட், லோட்ஸே, கஞ்சென்ஜங்கா, மனாஸ்லு ஆகிய மலைச் சிகரங்களிலிருந்து சுமாா் 34 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக மலைகளில் கழிவுகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.