ஹனாய்: அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வியத்நாமில் கரோனா பரிசோதனை பொருள்களின் விலை அளவுக்கதிமாக அதிகரிக்கச் செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் குயேன் தான்லாங், தலைநகா் ஹனாய் மேயா் சுகாா் ஆன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் இருவரது பதவிகளும் பறிக்கப்பட்டன. மேலும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் அவா்கள் வெளியேற்றப்பட்டனா்.