திபெத்தில்  நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

திபெத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4:01 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லாசா [திபெத்]: திபெத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4:01 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தேசிய நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி,  திபெத்தின் ஜிசாங்கில் திங்கள்கிழமை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 35.06 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 83.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும், 149 கிமீ ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com