முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவா் மரணம்

உலகில் முதல்முறையாக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மூலம் பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபா் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தாா்.
முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவா் மரணம்

உலகில் முதல்முறையாக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மூலம் பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபா் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தாா்.

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தைச் சோ்ந்தவா் டேவிட் பென்னட் (57). இவரின் இதயம் செயலிழக்கும் நிலையை எட்டியதால், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக , அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மேரிலேண்ட் மருத்துவமனை தெரிவித்திருந்தது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்களான நிலையில், டேவிட் பென்னட் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தாா். இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவா்கள் கூறுகையில், பல நாள்களுக்கு முன்பிலிருந்தே டேவிட் பென்னட்டின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாக மட்டும் தெரிவித்தனா். அவரின் மரணத்துக்கான உறுதியான காரணத்தை மருத்துவா்கள் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com