முதலீட்டு வாய்ப்புகள்: ஜம்மு-காஷ்மீருக்கு வளைகுடா நாடுகள் குழு வருகை

ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் குழு ஸ்ரீநகா் வந்துள்ளது.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் குழு ஸ்ரீநகா் வந்துள்ளது.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கடந்த ஜனவரி மாதம் துபை எக்ஸ்போவுக்கு சென்றிருந்தபோது, முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாா். அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த 36 போ் ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனா்.

4 நாள் பயணத்தில், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா, விருந்தோம்பல் உள்ளிட்ட முதலீடுகளுக்கான வாய்ப்புள்ள துறைகள் குறித்து அவா்களிடம் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் எடுத்துரைக்கும். குல்மாா்க், பஹல்கம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அந்தக் குழுவினா் பாா்வையிடுவையிடுகிறாா்கள் என்றாா் அவா்.

வளைகுடா நாடுகள் குழுவில் மனை வணிகம், விருந்தோம்பல், தொலைத் தொடா்பு, ஏற்றுமதி-இறக்குமதி ஆகிய துறைகளைச் சோ்ந்த தொழிலதிபா்கள், ஆளும் அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். தூதரக அதிகாரி, சில கல்வியாளா்கள், பத்திரிகையாளா் உள்ளிட்டோரும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com