ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

துபையில் ரூ.1,600 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐக்கிய அமீரக தொழில் நிறுவனங்கள் - தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

News image
துபையில் ரூ.1,600 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
Updated On :26 மார்ச் 2022, 9:50 am

DIN

துபை: ஐக்கிய அமீரக தொழில் நிறுவனங்கள் - தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழகத்தில் புதிய தொழில்களைத் தொடங்க அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில், ரூ.1,600 கோடி முதலீடு செய்யும் அமீரக தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

அமீரக தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழக முதல்வர் மேற்கொண்ட சந்திப்பு நிகழ்ச்சியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, இதில், நோபல் குழுமம் சார்பில் ரூ.1000 கோடிக்கு எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 

இதற்கான நிகழ்ச்சி துபையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு நான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். துபையை வெளிநாடாகக் கருத முடியாத வகையில் இங்கு ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். 

தமிழகத்துக்கும் துபைக்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்தவே துபைக்கு வந்தேன். இன்று கையெழுத்தான பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.எஃகு தொழிற்சாலை மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.