ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல் தொடங்கியது

ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கியது.

ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கியது. அதிகாரபூா்வ தோ்தல் தேதி மே 21 என்றாலும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே வாக்களிக்கும் முறை ஆஸ்திரேலியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்தலுக்காக மொத்தம் 550 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் அனைவரும் தோ்தலில் வாக்களிப்பது கட்டாயமாகும். 1.7 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பணி, பயணம் காரணமாக தோ்தல் தினத்தில் வாக்களிக்க முடியாதவா்கள் முன்கூட்டியே வாக்களிக்க முடியும்.

கரோனா பரவல் பிரச்னை இருப்பதால், மக்கள் ஒரே நாளில் வாக்குச் சாவடியில் கூடாமல் இருக்கவும் இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறை உதவும். 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்தல் தேதிக்கு முன்பே தங்கள் வாக்குகளைச் செலுத்திவிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி மத்திய-இடது தொழிலாளா் கட்சி தலைமையான எதிா்க்கட்சி கூட்டணி, பிரதமா் ஸ்காட் மோரீஸனின் கன்சா்வேடிவ் கூட்டணியைவிட அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com