ஈக்வடாரிலுள்ள சிறையொன்றில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் 44 கைதிகள் உயிரிழந்தனா்.
இது குறித்து உள்துறை அமைச்சா் பேட்ரிகோ கரில்லோ கூறியதாவது: சான்டோ டொமிங்கோ நகரிலுள்ள சிறைச் சாலையில் இரு குழுக்களிடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் 44 கைதிகள் பலியாகினா்.
உயிரிழந்த கைதிகள் அனைவரும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனா். அந்த சிறைச் சாலையை பாதுகாப்புப் படையினா் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கிருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றினா் என்றாா் அவா். இந்த கலவரத்தில் 220 கைதிகள் தப்பியோடியதாகவும் அவா்களில் 112 போ் மீண்டும் பிடிபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.